Posted in

ஒரு தரத்தில் ஒரு கேள்வி

சில வேளைகளில் ஊடகவியலாளர்கள் ஒரே தரத்தில் இரண்டு அல்ல மூன்று கேள்விகளையுமே கேட்பதை அவதானித்திருப்போம். செவ்விகாணப்படுபவர் இதனால் எதற்குப் பதில்தருவது எனத் திணறுவது நடைபெறும். ஒரு தரத்தில் ஒரு கேள்வியே என்பதனை ஒரு முக்கிய விதியாகக் கொள்ளவேண்டும்.

சமூகநியமங்களை/விழுமியங்களை ஏற்றிக் கேட்கப்படும் கேள்விகள்

சமூகத்தில் ஏற்கப்பட்ட நியமங்களை/விழுமியங்களைக் கேள்விமீது ஏற்றிக்கேட்கப்படும் கேள்விகள் தவிர்க்கப்படவேண்டும். எவ்விதமான சமூகநியமமாக இருந்தாலும் கேள்விமீது அதனை ஏற்றிக் கேள்விகளைக் கேட்பது உகந்ததல்ல. ஊடகவியலில் உரிய அணுகுமுறையாக இது இருக்கமுடியாது; ஏனெனில் ஊடகவியலாளர் செவ்விகாணப்படுபவர் இருவரிற்குமிடையில் நேர்காணல் நிலைமையில் ஒருவகை ஏற்றத்தாழ்வு இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் . உரிய உதாரணத்துடன் ஒரு காணொளியில் இதனை விளக்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *