ஒரு நேர்கானலின்போது விடயம் எதுவென்பதான தெளிவு இல்லாவிட்டால் சம்பந்தப்படாத கெள்விகளையும் வினவநேரும். இதனால் நேர்காணல் முடிந்தபின்னர் பதிவாக்கிய நேர்காணலைக் கேட்டு பொருத்தமான குறிப்பிட்ட விடயத்திற்குத் தேவையான பகுதியைத் தெரிவுசெய்வதற்குள் போதும்போதுமென்றாகிவிடும். இதுவே ஒரு நேரஞ்சலாக இருந்தால் பார்வையாளர்களோ கேட்போரோ விசனம்கொள்ளவும்செய்வர்.
ஓரு ஊடகவியலாளராகியவர் ஒரு சமூகப்பிராணியாக இருப்பார். அதன் அர்த்தம் சமூகத்தில் நடக்கின்ற சகலவிடயங்கள்பற்றியும் ஒரு அடிப்படை அறிவினை அவர் கொண்டிருப்பார். இதன் அர்த்தம் சகலவிடயங்கள் பற்றியும் ஆளமான அறிவினை ஒரு ஊடகவியலாளர் கொண்டிருக்கவேண்டும் என்பதல்ல. ஒரு நேர்காணலிற்கு முன்னதாக குறிப்பிட்ட விடயதானம்பற்றி நிறைய தேடல்களை ஒரு ஊடகவியலாளர் செய்யவேண்டும் என்பதே இதன் அர்த்தம். நேர்காணல் செய்யப்படவேண்டியவர் குறிப்பிட்ட விடயதானத்தில் எவ்வகைக் கருத்தைக் கொண்டிருக்கிறார், ஏன் அந்தக் கருத்தை அவர் கொண்டுள்ளார் என்பதுவும் இன்னும் பிறவுமான விடயங்களை செவ்வியாளர் தெரிந்திருக்கவேண்டும்.